அறிவுக்கு விருந்து – 09.11.2019 (சனி)

அறிவுக்கு விருந்து – 09.11.2019 (சனி)

வரலாற்றில் இன்று - நவம்பர் 9 (November 9) கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள்.

நிகழ்வுகள்

·  1277அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
·  1520ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
·  1688மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான்.
·  1720எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
·  1793கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.
·  1799பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
·  1867சப்பானின் கடைசி இராணுவ ஆட்சியாளர் ஆட்சியை சப்பானியப் பேரரசரிடம் ஒப்படைத்தனர். மெய்சி மீள்விப்பு ஆரம்பமானது.
·  1888கிழிப்பர் ஜேக் மேரி ஜேன் கெலியைக் கொன்றான். இதுவே அவனது கடைசிக் கொலையாகும்.

பிறப்புகள்

·  1877முகமது இக்பால், பாக்கிஸ்தானிய மெய்யியலாளர், கவிஞர், அரசியல்வாதி
·  1896திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர்
·  1897ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (. 1978)
·  1912சத்யன், மலையாளத் திரைப்பட நடிகர் (. 1971)
·  1914எடி இலமார், ஆஸ்திரிய-அமெரிக்க நடிகை, கண்டுபிடிப்பாளர் (. 2000)
·  1934கார்ல் சேகன், அமெரிக்க வானியலாளர், எழுத்தாளர் (. 1996)

இறப்புகள்

·  1576நான்காம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1507)
·  1918கியோம் அப்போலினேர், இத்தாலிய-பிரான்சியக் கவிஞர் (பி. 1880)
·  1953அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அரேபிய மன்னர் (பி. 1880)
·  1962தோண்டோ கேசவ் கார்வே, இந்திய செயற்பாட்டாளர் (பி. 1858)
·  1969பி. வி. செரியன், இந்திய அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1893)
·  1970சார்லஸ் டி கோல், பிரான்சின் 18வது அரசுத்தலைவர் (பி. 1890)
·  1988தேங்காய் சீனிவாசன், தமிழக நாடக, திரைப்பட நடிகர், (பி.1937)

சிறப்பு நாள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை: தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.
மு.வரதராசனார் உரை:உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
Translation: A timely benefit, -though thing of little worth,
The gift itself, -in excellence transcends the earth.
Explanation: A favor conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.
சிந்தனைக்கு     
பத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் அரைகுறையாக செய்வதை தவிர்த்து ஒரே வேலையை முழுமனத்தோடும் கருத்தோடும் செய்யலாம்.
தமிழ் அறிவோம்ஒத்தச் சொற்கள்
பாபாட்டு
பூமலர்
பேநுரை
விடுகதை விடையுடன்
ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
உள்ளங்கையும் விரல்களும்
பழமொழி- ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
பொருள்/Tamil Meaning கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? (எல்லாக் கல்லையும் திருப்தியுடன் வணங்குவது இலயாத காரியமாக இருக்கும்போது).
Transliteration  Orukootai kallum teyvamanal kumpitukirathu entak kallai?
தமிழ் விளக்கம்/Tamil Explanation எல்லோரும் இந்னாட்டு மன்னர் ஆனால் யார்தான் சேவகம் செய்வது? ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும்.
Enrich your   vocabulary
writhe துடி, நெளி
wipe துடை, சுத்தம் செய்
wire கம்பியால் கட்டு
Proverb
A snake could make an army panic    பாம்பென்றால் படையும் நடுங்கும்
Opposite Words 
Floor X Ceiling
  • We are located on the seventh floor of the building.
  • The house has two rooms with high ceilings.
Foolish X Wise
  • It would be foolish to ignore his advice.
  • I think you were wise to leave when you did.
மொழிபெயர்ப்பு
வெங்காயத்தாள்(பூ
(சிறியவகை) வெண்முள்ளங்கி
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl + P
அச்சு சாளரத்தை திறகும்
Ctrl + R
திரையின் வலதுபுறத்தில் வரி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை ஒத்திசைக்கிறது.
இனிக்கும் கணிதம்      ..பெய்தல் அளவு..
2 குறுணி - 1 பதக்கு                   2 பதக்கு - 1 தூணி                       5 மரக்கால் - 1 பறை
அறிவியல் அறிவோம்   மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
அறிவியல் துளிகள் - ஒலிக்சிதறல் - ராலே
Celosia argentea (Silver cockscomb) W IMG 0985.jpgதினம் ஒரு மூலிகை பண்ணைக்கீரை
பண்ணைக்கீரை அல்லது மசிலிக்கீரை (Celosia argentea)] என்பது மூலிகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரம் வெப்ப மண்டல காடுகளில் செழித்து பூத்து வளரும் தன்மை கொண்டது.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் –   உள்நாட்டு பழங்கள் (native fruits):       'ஆஸ்திரேலியா ஆப்பிள் அல்லது வாஷிங்டன் ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் சத்தைக் காட்டிலும் நம் நாட்டில் விளையும் சப்போட்டாவில் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம்,'' வரலாற்றுச் சிந்தனை  ஆண்டுகள்  முக்கிய நிகழ்வுகள்
1956  இந்து வாரிசு உரிமைச் சட்டம்
1956 
இந்து இளவர் காப்புரிமைச்சட்டம்
1961 
வரதட்சனை கொடுமைச்சட்டம்  மகப்பேறு சலுகைச்சட்டம் சிசு வதைச்சட்டம்
தன்னம்பிக்கை கதை- கடைசி சிரிப்பே முதல் சிரிப்பு!!!
மொகுஜென் என்னும் ஜென் துறவிக்கு எப்படி சிரிப்பதென்றே தெரியாது, சொல்லப்போனால் எப்போதும் முகத்தை கோபமாக இருப்பது போலவே வைத்திருப்பார். ஒரு நாள் அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே "இந்த உலகத்தை விட்டு போகப் போகிறோம்" என்பதை உணர்ந்த அவர் தன் சீடர்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்பினார். அது என்னவென்றால், நீங்கள் என்னிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் படித்துள்ளனர். எங்கே நீங்கள் கற்றுக் கொண்ட ஜென் தத்துவத்தை வெளிகாட்டுங்கள் என்று சொன்னார். பின் யார் ஒருவர் அதனை சரியாக வெளிப்படுத்துகிறாரோ, அவரே என் வாரிசு மற்றும் அவர் என் கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அனைத்து சீடர்களும் பதிலளிக்காமல், மொகுஜென்னின் சிரிக்காத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். என்சோ என்னும் சீடன், அவரைப் பார்த்தாலே மிகவும் பயப்படுவான். இருப்பினும் அவருடன் நீண்ட நாட்கள் இருந்ததால், அவரின் அருகில் சென்று, அங்குள்ள ஒரு மருந்து கோப்பையை நகர்த்தினான். இதுவே துறவியின் கேள்விக்கான பதில் என்பது போல் அந்த என்சோ வெளிப்படுத்தினான். அப்போது அந்த துறவியின் முகம் இன்னும் கடுமையாக மாறியது. பின் அந்த துறவி "என்ன அனைவருக்கும் புரிந்ததா?" என்று கேட்டார். அதனைக் கண்ட அவன், உடனே எழுந்து வெளியே சென்று விட்டு, திரும்பி பார்த்து, மீண்டும் அவரின் அருகில் சென்று, அந்த கோப்பையை நகர்த்தினான். பின்னர் இதுவரை சிரிக்காமல் இருந்த துறவியின் முகமானது, அவனது செய்கையைக் கண்டு, புன்னகையானது பீறிட்டு வெளிவந்தது. பிறகு அந்த துறவி அவனிடம் "முட்டாளே! நீ என்னுடன் பத்தாண்டுகள் இருந்தாய். நீயோ இதுவரை என் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று பார்த்ததில்லை. இருப்பினும் நீ அதைப் புரிந்து கொண்டு, எனக்கு உதவினாய். ஆகவே நீ இந்த கோப்பையை எடுத்துக் கொள். இனிமேல் இது உனக்கு சொந்தமானவை" என்று சொன்னார்.

பார்ப்போம் பாடுவோம் ஔவையார் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=rHX9xQoEJoo&t=33s

இணையம் அறிவோம்  * இந்தியதேர்தல் ஆணையம்இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

செயலி ஆத்திசூடி (Athichudi)

https://play.google.com/store/apps/details?id=io.athichudi.starter  


No comments:

Post a Comment