அறிவுக்கு விருந்து – 20.09.2019 (வெள்ளி)
வரலாற்றில் இன்று
நிகழ்வுகள்
· 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது.
· 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
· 1928 – நாராயணகுரு, இந்திய ஆன்மிகவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1855)
சிறப்பு நாள்
குறளறிவோம்- 73 . அன்புடைமை
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
என்போடு இயைந்த தொடர்பு.
கலைஞர் மு.கருணாநிதி உரை: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
மு.வரதராசனார் உரை: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
Translation: Of
precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.
The union yields one fruit, the life of love alone.
Explanation: They say that the
union of soul and body in man is the fruit of the union of love and virtue (in
a former birth).
சிந்தனைக்கு
விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
தமிழ்
அறிவோம் ஒத்தச் சொற்கள்
பூ
-----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு
பை
-----> பாம்புப் படம்,
பசுமை,
உறை போ -----> செல்
விடுகதை
விடையுடன்
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும்
விற்காத கல், அது என்ன? விக்கல்
பழமொழி குருவுக்கும் நாமம் தடவி/போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டதுபோல.
பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.
பொருள்: ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது.
விளக்கம்: கோபாலப் பெட்டி
என்பது
என்ன?
விடை
நாமம்
என்ற
பெயரில் உள்ளது.
புரட்டாசியில் சனிக்கிழமைதோறும் பிச்சையெடுக்கும் விரத்துக்கு கோபாலம் என்று
பெயர்.
இன்றும் அதைக்
காணலாம். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி
என்று
குறிக்கப்பட்டது.
Enrich your vocabulary
Enrich your vocabulary
Sack..கோணிப்பை
Sacred....புனிதமான
Sacrifice....தியாகம்
Sad....துன்பமிக்க
Saddle....குதிரை சேணம்
Opposite Words
Compliment —— Insult
- Being compared to Abba is a great compliment.
- His comments were seen as an insult to the president.
Conceal —— Reveal
- She tried to conceal the fact that she was pregnant.
- He may be prosecuted for revealing secrets about the security agency.
மொழிபெயர்ப்பு
குருக்கிழங்கு
|
|
மரவள்ளிக் கிழங்கு
|
Proverb
It
takes two to make quarrel
இரு
கை
தட்டினால் தான்
ஓசை
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ [
|
தேர்வு செய்த எழுத்து சைஸ் குறைக்க.
|
Ctrl
+ / + c
|
இன்செர்ட் (¢)செய்ய
|
இனிக்கும்
கணிதம் முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
அறிவியல் அறிவோம் – மூலிகைப் பொடிகள்
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும்.
மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி
நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
அறிவியல் துளிகள் - மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
தினம் ஒரு மூலிகை - மஞ்சள் :
மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma
longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை
கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும்
பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ.
உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில்
உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள்
கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம்
உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின்
புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin)
எனும் வேதிப்பொருள் உண்டு, இது
மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத்
தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே
மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
·
முட்டா மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் கரிமஞ்சள்
·
நாக மஞ்சள் காஞ்சிரத்தின
மஞ்சள் குரங்கு மஞ்சள் குடமஞ்சள்
·
காட்டு மஞ்சள் பலா மஞ்சள் மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள்
மஞ்சளின் இயல்புகள்
முட்டா
மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.
கஸ்தூரி
மஞ்சள்
இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.
விரலி
மஞ்சள்
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
மஞ்சளின் பயன்பாடுகள்
·
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப்
பயன்படுகிறது.
·
பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள்
கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும்
தன்மை கொண்டது.
·
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
·
உணவுப் பொருட்கள்
கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
·
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
·
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப்
போக்குகிறது.
·
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல்
நீண்டநேரம் பாதுகாக்கிறது.
·
காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும்
மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட
காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – டிராகன் பழம்
டிராகன் பழத்தின் நன்மைகள் தெரியுமா.சிவப்பு நிற
தோல்களையும், உட்புறத்தில் வெண்மை
நிற
சதை
பற்றையும் கொண்ட
இந்த
பழத்தில் இருந்து நமக்கு
கிடைக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் : புற்று நோய்க்கான செல்கள் உருவாவத தடுத்து நம்மை
பராமரிக்கிறது டிராகன் அடிக்கடி இடம்
மாற்றம் செய்பவர்களுக்கு உடலில்
ஏற்படும் உடல்
நல
கோளாறுகள், இதர
பிரச்சனைகளுக்கும் இந்த
பழம்
மிகவும் பயன்
உள்ளது.
உடலில் இருக்கும் கெட்ட
கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி நன்மை
தரும்.வைட்டமின் சி, வைட்டமின் பி1,
வைட்டமின் பி2,
வைட்டமின் பி3
போன்றவை காண
படுவதால் ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த
ஊட்டத்தையும் சீராக
செயல்
பட
செய்து
மற்றும் மாரடைப்பு வராமல்
பாதுகாக்கும். நோய்
எதிர்ப்பு திறனை
கொடுத்து நச்சு
தன்மையை அழித்து ரத்தத்தில் இருக்கும்
கிருமிகளினை நீக்கி
ஆரோக்கியத்தை கொடுக்கும் வல்லமை
கொண்டது.
இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி
செய்து
இதய
நோய்களை தடுக்கும் தன்மை
கொண்டது மற்றும் செரிமான உறுப்புகளை வலு
பெற
செய்து
செரிமானத்தை சீராக
நடத்தும்.
வரலாற்றுச் சிந்தனை செங்கிஸ்கான் (கி.பி. 1206 - 1227)
இளம் வயதில் பல ஆண்டு
கள் அடிமையாக வாழ்ந்தவர். பிறகு மங்கோலிய மலை ஜாதிக்குழுக்களை இணைத்து அவர்களின் தலைவராகி,
சிறிது சிறிதாக மத்திய ஆசியாவின் பல பகுதிகளையும் சீனாவையும் கைப்பற்றி ஆட்சி செய்தவர்!
முரட்டுத் தனத்துக்கு மறுபெயர் இவர்தான்! மக்களை கூட்டமாக நிறுத்தி அசால்ட்டாக கொன்று
தள்ளுவது இவருடைய பொழுது போக்குகளில் ஒன்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment