அறிவுக்கு விருந்து 26.02.2020 (புதன்)


அறிவுக்கு  விருந்து  26.02.2020 (புதன்)
பெப்ரவரி 26 (February 26) கிரிகோரியன் ஆண்டின் 57 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

·  364முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
·  1233மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர்.
·  1606இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார்.
·  1616பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார்.
·  1658வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
·  1748ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]
·  1794கோபனாவன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
·  1815இத்தாலியின் எல்பாத் தீவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் அங்கிருந்து தப்பினார்.
·  1841இலங்கையின் முதலாவது இசுக்கொட்லாந்து பிரெசுபிட்டேரியத் தேவாலயத்திற்கான அடிக்கல் கொழும்பு புறக்கோட்டையில் நாட்டப்பட்டது.[2]

பிறப்புகள்

·  1564கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (. 1593)
·  1780கிறித்தியன் சாமுவேல் வெயிசு, செருமானியக் கனிமவியலாளர் (. 1856)
·  1802விக்டர் ஹியூகோ, பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (. 1885)
·  1842காமில் பிளம்மாரியன், பிரான்சிய வானியலாளர் (. 1925)
·  1861நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசிய அரசியல்வாதி (. 1939)
·  1866எர்பர்ட்டு என்றி டவ், கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (. 1930)

இறப்புகள்

·  1878ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (பி. 1818)
·  1887ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (பி. 1865)
·  1931ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1847)
·  1933சிவகங்கை இராமச்சந்திரன், தமிழக செயற்பாட்டாளர் (பி. 1884)
·  1966வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியக் கவிஞர், அரசியல்வாதி (பி. 1883)

சிறப்பு நாள்

 குறளறிவோம்-  168. அழுக்காறாமை

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.
மு.வரதராசனார் உரை:பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
Translation: Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Explanation: Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).
சிந்தனைக்கு:
வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே
செடியில் இலைகள் அதிகம் என்றாலும் அதில் பூக்கும் மலருக்கே மதிப்பு அதிகம்.
தமிழ் அறிவோம்:
  1. அலரி = பூ-மரம், அருகன்
  1. அழுங்கல் = இரக்கம், கேடு

விடுகதை விடையுடன்  முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?  நட்சத்திரங்கள்
பழமொழி- முப்பது நாளே போ, பூவராகனே வா.
பொருள்: வேலையில் ஆர்வமில்லாது எப்போது மாதம் முடிந்து சம்பளம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனைக் குறித்துச் சொன்னது.
விளக்கம்: வராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது.
Enrich your   vocabulary
Labourios.....கடின  உழைப்பாளர் 
Snout....நீண்ட மூக்கு

Proverb   A bad workman always blames his tools.

This proverb is used when someone blames the quality of their equipment or other external factors when they perform a task poorly.
Example: X: The turkey isn’t cooked well because the oven is not functioning well. Y: Well, it’s the case of a bad workman blaming his tools.
Opposite Words 
Pure X Impure
  • Our beef patties are 100% pure.
  • Some of these drugs are highly impure.
Push X Pull
  • I promised to push him on the swings for as long as he wanted.
  • She pulled open the door and hurried inside.
மொழிபெயர்ப்பு
(மலர்ப்போன்ற) கோசு
பிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
கணினி ஷார்ட்கட் கீ
Alt+N and C
Chart
Alt+N and P
Pictures

இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்

இடவியற்கூறு Topology (Mathematical Structure)
இடவியற்சமானம் Topological Equivalence
அறிவியல் அறிவோம்   
தளக்கோணத்தின் அலகு என்ன?- ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட  மையத்தில் தாங்கும் கோணம்)
திண்மக் கோணத்தின் அலகு என்ன? – ஸ்டிரேடியன்
உணவு  வைட்டமின் குறைபாடு : வைட்டமின் D குறைபாடு
எலும்பில் ஏற்படும் குறைபாடுகள்
ரிக்கட்ஸ் (Rickets)
ஆஸ்டியோ மலேசியா (Osteomalacia)
ஆஸ்டியோ ஃபோரோஸிஸ் (Osteoporosis)
தினம் ஒரு மூலிகை - உலர்திராட்சையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், கர்ப்பிணி பெண்கள் உலர்திராட்சையுடன் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும், ஒரு கிளாஸ் அருந்தினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றப்பழம் உலர் திராட்சை. எலும்புகள் உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான  சத்து கால்சியம் தான். இந்த கால்சியம் சத்து உலர்திராட்சை பழத்தில் அதிகமாக உள்ளது.   தினமும் உடல் வலியால் அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன், உலர் திராட்சை பழத்தை சேர்த்து கஷாயம் செய்து அருந்திவர உடல் வலி குணமாகும்.

வரலாற்றுச் சிந்தனை  தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கி.மு. 2000-களில் தொடங்கி இன்று வரை தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை பிரித்துப் பார்க்கலாம்.  தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆட்சி செய்தவர்கள், தமிழர்கள் அடைந்த இன்னல்கள் என பல முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது.  தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைகின்றது. அவை தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளைக் கோடிக் காட்டுகின்றது. இந்தக் காலக்கோடு, கல் ஆயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இந்தக் காலத்துத் தமிழர்கள் வரை பிரித்துக் காட்டுகின்றது.  அத்துடன் அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், அவர்கள் அடைந்த வெற்றித் தோல்விகளையும், அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிய உதவுகின்றது.

தன்னம்பிக்கை கதை-  நரியும் போர் முரசும்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியுடன் அலைந்து கொண்டிருந்தது. அரை மயக்கத்துடன் தள்ளாடி கொண்டு நடந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்றபோது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. நரிக்கு உயிரே போயி விட்டது போல் இருந்தது. ஏதோ பயங்கர விலங்கு ஒன்று நம் காட்டுக்குள் வந்து விட்டது என்று எண்ணிய நரிக்கு அடி வயிறு கலங்கியது. பசி நேரத்தில் நம்மால் ஓடக் கூட முடியாதே சரி எப்படியும் இந்த விலங்கிடம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணிக் கலங்கியது நரி. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தும் ஏதும் நடக்காமல் போகவே கொஞ்சம் தெம்பு வந்தது. அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.

அப்போது தூரத்தில் ஒரு பெரிய பாறை போன்ற ஒரு உருவம் தென்பட்டது.மீண்டும் ஒரு முறை திடீரென சப்தம் உண்டானது. நரிக்கு கலக்கம் அதிகமானது.சற்று உற்று பார்த்த போதுதான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல மெல்ல சென்று சுற்றி சுற்றிப் பார்த்தது. பார்ப்பதற்கு பயன்படுத்தி பல நாட்கள் ஆனது போல் இருந்தது. உள்ளே ஏதோ சிறிய மிருகம் ஒன்று இருந்து கொண்டுதான் சப்தம் எழுப்புகிறது என்று எண்ணியது நரி.பசியில் இருந்த நரி பேரானந்தம் கொண்டது. தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணிய நரி அவ்வாறே செய்தது. அப்போது நரிக்கு தாடை மற்றும் கைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வந்தது. உள்ளே இருக்கும் மிருகத்தினை பிடிக்க தயாராக இருந்த நரிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அங்கே ஒன்றுமே இல்லை. பசியோடு இருந்த நரிக்கு இரத்தக் காயங்கள் மேலும் சோர்வை ஏற்படுத்த மயக்கமுற்றது. உண்மையில் அருகில் இருந்த புதர்ச் செடிகள் முரசின் மீது காற்றில் உரசி உரசியே அந்த சப்தம் உண்டானது.

நீதி- எந்நிலையிலும் எந்த ஒரு காரியத்தையும் ஆராயாமல் செய்வது நன்மையை தராது!

 

தமிழ் அறிவோம்  https://www.youtube.com/watch?v=NzwSYeLIjWQ&list=PLUCMPIJrLjnG2EV2RA-5vv9gJys-Ja2RZ&index=2

இணையம் அறிவோம்  https://dsal.uchicago.edu/dictionaries/winslow/

தொகுப்பு   https://kanchidigitalteam.blogspot.com

No comments:

Post a Comment