அறிவுக்கு விருந்து
24.02.2020 (திங்கள்)
பெப்ரவரி 24 (February
24) கிரிகோரியன் ஆண்டின்
55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில்
311) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
· 1739
– கர்னால் சமரில், ஈரானிய
ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய
முகலாயப்
பேரசர் முகம்மது ஷாவின்
படைகளைத் தோற்கடித்தார்.
· 1826
– பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும்
பர்மா
மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை
அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
· 1986
– ருக்மிணி தேவி அருண்டேல்,
தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா
நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)
குறளறிவோம்- 166. அழுக்காறாமை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
கலைஞர்
மு.கருணாநிதி உரை: உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை
மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.
Translation:
Who scans good gifts to others
given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.
His kin, with none to clothe or feed them, surely die.
Explanation:
He who is envious at a gift (made
to another) will with his relations utterly perish destitute of food and
rainment.
சிந்தனைக்கு:
கல்
மீது
விழும்
ஒவ்வொரு அடியும் கல்லை
சிற்பமாக்குகிறது.
சில
நிமிடங்கள் மௌனமாய் இருங்கள். கோபம் தணிந்து விடும்.
தமிழ் அறிவோம்:
|
|
விடுகதை விடையுடன்
நான்கு கால்கள்
உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான்,
உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்? நாற்காலி
பழமொழி-
கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன்
மேற்கே
பார்த்தான்.
பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.
விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.
Enrich your vocabulary
பொருள்: அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான்.
விளக்கம்: கூத்து என்றால் நடனம். பரமசிவனுக்குக் கூத்தன் என்றொரு பெயருண்டு. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். எனவே கூத்தாடி களைத்து சூரியன் கிழக்கில் உதிப்பதை எதிர்நோக்கியிருப்பான். அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆசிரியர் ’கல்கி’ தன் ’பொன்னியின் செல்வன்’ புதினத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் இரவில் நடைபெறும் ஒரு குரவைக் கூத்து பற்றி எழுதியுள்ளார்.
Enrich your vocabulary
Flippers.. . துடுப்பு
Predators....ஊன் உண்ணிகள்
Proverb Don’t
bite off more than you can chew.
meaning : If you take a bite of food that’s too big, you
won’t be able to chew! Plus you could choke on all of that extra
food. It’s the same if you take on more work or responsibility than you
can handle—you will have a difficult time. So it’s best not to get
involved in too many projects, because you won’t be able to focus and get them
all done well.
Opposite Words
Predator
X Prey
- Some animals have no natural predators.
- The lion will often stalk its prey for hours.
Pretty
X Ugly
- She still looks pretty miserable.
- Nick’s dog is as ugly as sin.
மொழிபெயர்ப்பு
ஒரு
வகை
கோசு
(சலாது)
|
|
அவரை
(போஞ்சி)
|
கணினி ஷார்ட்கட் கீ
Alt+Q
|
Goto tell me box
|
Alt+R
|
Review tab
|
இனிக்கும் கணிதம் கணிதக் கலைச்சொற்கள்
இடமாற்றுத்துணை அணி Transposed conjugate (of
matrix)/Tranjugate matrix
இடவியல் Topology (Division
of Mathematics)
அறிவியல் அறிவோம்
# திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 மி.மீ
# ஒரு பொருளில் அடங்கியுள்ள
பருப்பொருள்களின் கன அளவு அதன்______எனப்படும் – நிறை எனப்படும்
# ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை
கண்டறிந்தவர் யார்? – கலிலியோ
தினம் ஒரு மூலிகை மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது. எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.
உணவு – புரதக்
குறைபாடு : (குவாஷியாக்கர், மராஸ்மஸ்)
குவாஷியாக்கர் (Kwashiorkar)வளர்ச்சி குறைவு,
மனவளர்ச்சியில் மாற்றம், உடல்
வீக்கம், தசை
இழப்பு,
நிலா
போன்ற
முகம்,
கல்லீரல் குறைபாடுகள், இரத்த
சோதனை,
இரைப்பை மற்றும் குடல்
சார்ந்த பாதிப்புகள் மற்றும் தோல்,
முடி
நிறம்
மாறுதல் போன்றவைகள் இந்நோயில் காணப்படும்.
மராஸ்மஸ் (Marasmus)
: வளர்ச்சி குறைபாடு, தசை
இழப்பு,
அடிப்போஸ் திசு
இழப்பு,
உலர்ந்த தோல்
போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். இரத்த
சோகையும் இந்நோயில் இருக்கலாம்
தினம் ஒரு மூலிகை - வெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்..
வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது. வெந்தயத்தில் உள்ள
காலக்டோமேனன் என்ற
கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை
கட்டுப்படுத்தி நீரழிவு நோயை
கட்டுப்படுத்துவதில் பெரும்
பங்கு
வகிக்கிறது.வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற
வேதிப்பொருள் ஆண்
ஹார்மோன் உற்பத்தியில் பெரும்
பங்கு
வகித்து ஆண்கள்
பிரச்சனைகளை போக்குகிறது.
தொடர்ந்து காலையில் வெந்தயம் சாப்பிட்டு வருவதால் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு
பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது.தொண்டையில் ஏற்படும் அல்சர்,
புண்,
வலி
மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல்
மற்றும்தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல
நிவாரணம் தருகின்றது.வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நெஞ்சு
எரிச்சல் மற்றும் ஒவ்வாமை குணமாக்குகின்றது.ஸ்டார்ச் இல்லாத
பாலிசாக்கரைடு வகை
நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள
உணவு
செரித்தலுக்கு துணைபுரிகிறது.வெந்தயத்தை நீரில்
ஊறவைத்து ஒரு
ஜாரில்
போட்டு
ஒரு
சுத்தமான துணியால் மூடி
வைக்கவும். ஓரிரு
நாட்களில் முளைகட்டிவிடும். இந்த
முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.
வரலாற்றுச் சிந்தனை
தெற்காசிய
வரலாற்றுக் காலக்கோடு
|
கற்காலம்
(50,000–3000 BCE)
|
பாரம்பரியம்
(230BCE–1279CE)
|
மத்தியகாலம்
(1206–1596)
|
ஒரு
ஊருல ஒரு பெரிய்ய காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள்ள ஒரு குகை. குகையின் உள்ளே
சுருண்டபடி படுத்திருந்தது அந்த நரி.
குகைக்கு
வெளியே வந்து நின்ற கரடி "நரியாரே! உமக்கு என்னநேர்ந்தது! ஏன் குகையை விட்டு இரண்டு நாளாகவெளியேவரவில்லை" என்று சப்தமாக கேட்டது.
கரடி
காட்டுக் கத்தலாக கத்தியும் குகையின் உள்ளே எந்த சப்தமும் இல்லாமல் இருக்கவே கரடி
குகையின் உள்ளே சென்றது.
சுருண்டு
படுத்திருந்த நரியைக் கண்டதும் நரியாரே உமக்குஎன்னாயிற்று.. இப்போதும் உமக்கு உடல் நிலை சரியில்லையா?
அடிக்கடி இப்படி சுருண்டு படுத்துக் கொள்கிறீரே என்று அன்போடு
கேட்டது.
"கரடியாரே!
நான் என்ன செய்வது? எனக்கு அடிக்கடி உடல்நிலைசரியில்லாமல் ஆகிவிடுகிறது. அதன் காரணமாக உடலும்சோர்வடைகிறது. நாட்பட நாட்பட என் உடலும் மெலிந்து கொண்டேபோகிறது" என கவலையுடன் கூறியது.
அதனைக்கேட்ட
கரடி நரியாரே நீர் இரை சாப்பிட்டு முடித்ததும்அப்படியே படுத்துக் தூங்கி விடுகிறீர் உமது உடலை
வலுப்படுத்த நீர்துளியளவு மனதால் நினைக்க மாட்டீர் சாப்பிடுவதும் தூங்குவதுமாகவாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர். அதனால்தான் உமக்குஅடிக்கடி உடல் நிலை சரியில்லாத சூழ்நிலை
ஏற்படுகிறது என்றது.
கரடியாரே
என் உடல்நிலை இப்படியே இருந்தால் என்னால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலைக்கு
ஆளாக்கப்பட்டு உடல் பருமன் அதிகாரித்து படுத்த படுக்கையாகி விடுவேன். என் உடல் நிலை சீராக நீஎனக்கு உதவி செய்வாயா
என்று
கேட்டது நரி.
நரியாரே மெல்ல எழுந்து என்னோடு வாரும். நாம் இருவரும் சிறிதுநேரம் உற்பயிற்சி செய்யலாம்.
என்றது
கரடி.
நரியும், கரடியும்
ஒரு மரக்கிளையின் அருகே வந்தன. கரடி
உடனே மரக்கிளையைப் பிடித்து ஊஞ்சலாடத் தொடங்கியது. அதனைப் பார்த்து நரியும் சிறிது
நேரம் ஆடியது.
கரடி
வேகமாக ஓட ஆரம்பித்தது. நரியும் பின்தொடர்ந்து வேகமாக ஓடியது. சிறிது தூரம்
சென்றது கரடி. வேகமாக நடக்கத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நரியும் வேகமாக நடக்கத்
தொடங்கியது.
தன்
உடலில் மெல்ல மெல்ல சிறுசிறு மாற்றம் ஏற்படுவதை நரிஉணர்ந்தது.
அதே
நேரம் கரடி நரியாரே உமது உடல்நிலை இப்போது எப்படிஇருக்கிறது? ஏதோ உற்சாகம் நிரம்பியவர்
போன்று காணப்படுகின்றீரேஎன்று
கேட்டது.
ஆமாம் கரடியாரே எனக்கு உற்சாகமாகத்தான் இருக்கிறது. இதனைப்போன்று தினமும் உடற்பயிற்சி செய்தால் என் சோம்பல் எல்லாம்மறைந்துவிடும். என் உடலும் உறுதியாகிவிடும் என்றது நரி.
அன்று
முதல் நரி தினமும்
கரடியோடு சேர்த்து கொண்டு தன் உடலை உறுதியாக்கிக் கொண்டது.
நம்
உடல் உறுதியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
தமிழ் அறிவோம் https://www.youtube.com/watch?v=NzwSYeLIjWQ
இணையம் அறிவோம்
No comments:
Post a Comment