வரலாற்றில் இன்று - நவம்பர் 1 (November 1) கிரிகோரியன் ஆண்டின்
305 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில்
306 ஆம்
நாள்.
நிகழ்வுகள்
·
1009 – பர்பர்
படைகள் சுலைமான் இப்னு அல்-அக்காம் தலைமையில் உமையா
கலீபா இராண்டாம் முகம்மதுவை அல்கலேயா சமரில் வென்றன.
· 1512
– மைக்கலாஞ்சலோவினால்
வரையப்பட்ட சிஸ்டைன் சிற்றாலயத்தின்
கூரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.
· 1612
– போலந்துப்
படைகள் மாஸ்கோ,
கித்தாய்-கோரத் நகரில் இருந்து உருசியப் படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
பிறப்புகள்
இறப்புகள்
· 1972 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர், திறனாய்வாளர் (பி. 1885)
சிறப்பு நாள்
குறளறிவோம்- 95. விருந்தோம்பல்
பணிவுடையன்
இன்சொலன்
ஆதல்
ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
அணியல்ல மற்றுப் பிற.
கலைஞர் மு.கருணாநிதி உரை: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
மு.வரதராசனார் உரை:வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
Translation: Humility
with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.
Is choice adornment; all besides is nothing worth.
Explanation: Humility
and sweetness of speech are the ornaments of man; all others are not
(ornaments).
சிந்தனைக்கு
வேலை செய்யாமல் பிறரிடம் பணம்
பெறுவது பிச்சை
எடுப்பதற்கு சமம்.
எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட,
நமக்குத் தீமையை
உண்டாக்கும்.
தமிழ்
அறிவோம்ஒத்தச் சொற்கள்
யா
|
ஒரு
வகை மரம், யாவை, இல்லை
|
வ
|
நாலில்
ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
|
வா
|
வருக, ஏவல்
|
வி
|
அறிவு, நிச்சயம், ஆகாயம்
|
விடுகதை
விடையுடன்
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர்,
தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
பழமொழி- தெய்வம் காட்டும், ஊட்டுமா?
பொருள்/Tamil Meaning தெய்வம் வழிகாட்டும், ஆனால்
அந்த
வழியில் நாம்
தானே
போகவேண்டும்? தெய்வமே என்கையைப் பிடித்துக்கூட்டிச் செல்லவேண்டுமென்றால் எப்படி?
Transliteration Teyvam kaattum, uuttumaa?
தமிழ் விளக்கம்/Tamil Explanation
இதனால்தான் தெய்வத்தைத் தாய்
என்பதைவிட தந்தை
என்னும் வழக்கம் அதிகம்
உள்ளதோ?
இதனை
ஒத்த
ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு:
Enrich your vocabulary
Proverb
A low hedge is easily leaped over
ஏழை
என்றால் மொழையும் பாயும்
Opposite Words
Fact X
Fiction
- Much of the novel is based on fact.
- Anthony’s first books were historical fiction.
Fake X
Real
- The defense said the photos were fake.
- She had never seen a real live elephant before.
மொழிபெயர்ப்பு
செம்முள்ளங்கி
|
|
முள்ளங்கி
|
கணினி ஷார்ட்கட் கீ
Ctrl
+ 0
|
ஒரு பத்திக்கு இடைவெளி 6 துண்டுகளாக மாற பயன்படும் .
|
Ctrl
+
A
|
அனைத்து உள்ளடக்கத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
|
இனிக்கும் கணிதம் பொன்நிறுத்தல்..
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
அறிவியல் அறிவோம் - நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு அறிவியல் துளிகள் - இயற்கை கதிரியக்கம் -
ஹென்றி பெக்காரல்
தினம் ஒரு மூலிகை ஆகாயக் கருடன்

பழங்களும் அவற்றின் பயன்பாடுகளும் – பழுப்பாதல்
(BROWNING)
பழுப்பாதலை தடுக்கும் முறைகள் - பாலிஃபீனால்களை
வெப்பப்படுத்துவதன் மூலம் வினை புரியாமல் இருக்கச் செய்தல்.
வரலாற்றுச் சிந்தனை
மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்? பிருகத்ரதன்
தன்னம்பிக்கை
கதை- ஓட்டை
பானையும் ஒளிரும் பூவும்
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா!
என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதற்கு
விவசாயி, "பானையே!
நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
பார்ப்போம் பாடுவோம் -பாரதியார் பாடல்கள் https://www.youtube.com/watch?v=2CXAp09ldVU
பார்ப்போம் பாடுவோம் -பாரதியார் பாடல்கள் https://www.youtube.com/watch?v=2CXAp09ldVU
No comments:
Post a Comment